தமிழ்நாடு
பேருந்தில் பயணம் செய்ய ஆதார் அட்டை அவசியம்: அதிர்ச்சி அறிவிப்பு!
![aadhar-759 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/09/aadhar-759.jpg)
பேருந்துகளில் பயணம் செய்ய ஆதார் அட்டை அவசியம் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த அறிவிப்பு கொடைக்கானலுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பதும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் பேருந்துகள் இயக்கப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் சுற்றுலா தலங்களான கொடைக்கானல் குற்றாலம் போன்ற பகுதிகளில் சுற்றுலா செல்ல அனுமதி இல்லை என்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே பேருந்தில் செல்ல அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானல் பகுதிகளில் உள்ளூர்வாசிகள் பேருந்தில் பயணம் செய்யும்போது ஆதார் அட்டையை கண்டிப்பாக எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என போக்குவரத்து மேலாளர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று முதல் கொடைக்கானலுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மேலாளர் தெரிவித்துள்ளார். அதேபோல் நகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் உள்ளூர்வாசிகள் என்பதை உறுதி செய்வதற்காக ஆதார் அட்டை அவசியம் ஆக்கப்பட்டுள்ளது என்பதும் ஆதார் அட்டையை பேருந்து நடத்துனரிடம் உள்ளூர்வாசிகள் பயணம் செய்யும்போது கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து மேலாளர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கொடைக்கானல் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.