தமிழ்நாடு
குடிகாரர்களை வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டாம்: செல்லூர் ராஜூ கோரிக்கை!
குடிகாரர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் குடிகாரர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்து விடாதீர்கள் என்று மதுரையில் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியை கடந்து வேட்பாளர் தேர்வு முக்கியமானதாக இருக்கும் என்றும் ஒரு தலைமையை உயர்த்தியும் ஒரு தலைமையை குறைத்தும் அதிமுகவினர் சமூகவலைதளங்களில் பதிவிட கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கான ஆயத்தப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடித்து முடிவையும் அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டதை அடுத்து இது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைகளை நடத்தி வருகிறது என்பதும் வேட்பாளர்களையும் தேர்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.