இந்தியா
இந்தியாவில் 12 – 18 வயது உள்ளவர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி
![corona vaccine - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/corona-vaccine-4.jpg)
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சைடஸ் காடிலா, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக புதிய கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அந்த தடுப்பூசி 12 முதல் 18 வயது கொண்டவர்களுக்கு செலுத்தும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. இந்த தடுப்பூசி விரைவில் பெறப்பட்டு, அந்த வயதுடையவர்களுக்கு செலுத்தப்படும் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
இந்த ஆண்டு முடிவதற்குள் நாட்டில் உள்ள 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க ஒன்றிய அரசு இலக்கு வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் பல மாநில்களில் கொரோனா தடுப்பூசிகளின் இருப்பு காலியாகிவிட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், ஒன்றிய அரசின் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் பற்றி கேள்வியெழுப்பி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடர்ந்து தான், ‘நாட்டில் 18 வயது மேற்பட்ட தகுதி படைத்த அனைவருக்கும் இலவச தடுப்பூசி’ என்கிற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்நிலையில், தற்போது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.