இந்தியா
அதிர்ச்சி தகவல்.. 2 கொரோனா தடுப்பூசியைப் போட்டவருக்கும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று!
ராஜஸ்தானில் 2 கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொண்ட 65 வயது பெண்ணிற்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.
ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் அந்த மாநிலத்தின் முதல் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொண்ட 65 வயது பெண்ணிற்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் அறிகுறியற்ற டெல்டா பிளஸ் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் முழுமையாகக் குணமடைந்துவிட்டார் என்றும் பிகானேர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ஓம் பிரகாஸ் சாசர் கூறியுள்ளார்.
மே 31-ம் தேதி இந்த பெண்ணின் கொரோனா சோதனை மாதிரி எடுக்கப்பட்டு, புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.