தமிழ்நாடு
ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம்; தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதனால் இன்று முதல் 24 ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய முழு முடக்க உத்தரவை தமிழக அரசு அமல் செய்துள்ளது.
இந்த முழு முடக்கத்தின் போது, மதியம் 12 மணி வரை மட்டும் தான் மளிகை கடைகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் திறந்திருக்கும், ஆன்லைன் வணிக தளங்கள் செயல்பட அனுமதியில்லை, அவசியத் தேவையுள்ள தனியார் நிறுவனங்கள் மட்டுமே செயல்படும், உரிய காரணங்களின்றி மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் மின்சாரக் கட்டணம் செலுத்த நேரிடும் மக்களுக்கு தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ‘மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10.5.2021 முதல் 24.5.2021 வரை இருக்குமாயின், அத்தொகையினை செலுத்த 31.5.2021 வரை மின் துண்டிப்பு, மறுஇணைப்புக் கட்டணமின்றி கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது.