தமிழ்நாடு
அமைச்சர்கள் தவறு செய்தால் பதவி நீக்கம் – முதல்வர் எச்சரித்ததாக தகவல்
அமைச்சர்கள் தவறு செய்தால் தயவு தாட்சண்யமின்றி பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக ஆட்சி அமைந்தது. முதல்வராக ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து முக ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக காவல்துறையினர்களை யாரும் மிரட்டக் கூடாது என்றும் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி அமைச்சர்கள் யாராவது தவறு செய்தால் தயவு தாட்சண்யமின்றி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பொதுமக்களுக்கு திமுக ஆட்சியின் மீது ஒரு நம்பிக்கை வந்துள்ளதாக தெரிகிறது. திமுக என்றாலே ஊழல் கட்சி என்று அதிமுக உள்பட ஒரு சில அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது முகஸ்டாலின் அந்த கறையை துடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.