தமிழ்நாடு
கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா: அடுத்து என்ன நடக்கும்?
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 65 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் கூடி எடப்பாடி பழனிச்சாமி அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்தனர். இதனால் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இந்த நிலையில் ஏற்கனவே ராஜ்யசபா எம்பியாக இருக்கும் கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய இருவரும் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ளனர். இதனை அடுத்து எம்எல்ஏ அல்லது எம்பி இரண்டில் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் இருவரும் உள்ளனர்
இந்த நிலையில் இன்றைய அதிமுக கூட்டத்தில் எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
வேப்பனஹல்லி தொகுதியில் கேபி முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கமும் எம்எல்ஏவாக தேர்வு பெற்ற நிலையில் தங்களது எம்பி பதவியை அவர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். இதனை அடுத்து மாநிலங்களவையில் அதிமுக எம்பி எண்ணிக்கையில் இரண்டு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.