தமிழ்நாடு
கொரோனா தடுப்பு பணி: சன் டிவி குழுமம் கொடுத்த மிகப்பெரிய நிதியுதவி!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது
சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத்துறை ஒன்றிணைந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முயன்றாலும் தினமும் சுமார் 25,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிக நிதி தேவைப்படுவதால் தொழிலதிபர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் கேட்டுக்கொண்டது. அதன்படி பல்வேறு தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோர் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தாராளமாக நிதிகளை வழங்கி வருகின்றனர்
அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள சன் டிவி குழுமம் சார்பில் ரூபாய் 30 கோடி நிதியுதவி செய்துள்ளது.