தமிழ்நாடு
கொரோனா பரவால் தடுக்க புதிய கருவி: முன்னாள் ராணுவ வீரரின் அசத்தல் கண்டுபிடிப்பு
கொரனோ பரவாமல் இருக்க புதிய கருவியை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கண்டு பிடித்து அசத்தியுள்ளார்.
கொரனோ வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜா என்பவர். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ள இவர் ஏற்கனவே தற்போது எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது நீக்கும் பணிகளை செய்து வருகிறார்.
ஏற்கனவே இவர் ராணுவத்திற்கு தேவையான சில உபகரணங்களை தயாரித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரனோ வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து கொரனோவை கட்டுப்படுத்த ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.
ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி வடிவில் இந்த கருவியை உருவாக்கி உள்ளதாகவும் இதன் மூலம் கொரனோ தொற்றுகளை காற்றில் பரவ விடாமல் அதனை எரித்து தூய காற்றை பரவும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜா மேலும் கூறியதாவது ’காற்றை நம்மால் எளிதில் சுத்தப்படுத்த முடியும். இந்த கருவி காற்றை உள்ளே இழுத்து அதில் உள்ள கொரனோ வைரஸ் உள்பட மோசமான கிருமிகளை அழித்து விட்டு சுத்தமான காற்றை நமக்கு வெளியேற்றும். இதை நாம் கொரனோ வார்டில் பயன்படுத்தலாம். கொரனோ நோயாளிகள் தும்மும்போதும் இருமும்போதும் காற்றில் கொரனோ வைரஸ் பரவும். அப்போது இந்த கருவி கொரனோ வைரஸ்களை உள்ளிழுத்து எரித்து அழித்து விட்டு அதன்பின் தூய காற்றை வெளியேற்றும். எனவே இந்த் கருவியை கொரோனா வார்டில் பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.