Connect with us

இந்தியா

ஒரு பிளேட் அரிசிக்கஞ்சி ரூ.1380: மருத்துவமனை நிர்வாகத்தை அலற வைத்த கொரோனா நோயாளி!

Published

on

தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு கொடுக்கப்பட்ட அரிசி கஞ்சிக்கு 1.380 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து அந்த கொரோனா நோயாளி மருத்துவமனை நிர்வாகத்தை அலற வைத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சேர்ந்தவர் சபீனா. இவருக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து கேரள அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையம் ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது ரூ.50 ஆயிரம் ரூபாய் கட்ட மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல மணி நேரம் கழித்தும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அரிசி கஞ்சி மற்றும் ஒருசில மாத்திரைகளை மட்டும் கொடுத்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் உள்ள நிலை குறித்து உறவினர்களிடத்தில் போனில் தெரிவித்ததை அடுத்து அவரது உறவினர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர்.

இதையடுத்து ஏப்ரல் 19ஆம் தேதி தேதி சபீனா டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது மருத்துவமனை நிர்வாகம் பில் கொடுத்துள்ளது. அதில் 24 மணி நேர சிகிச்சைக்காக மட்டும் 24 ஆயிரத்து 760 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதில் அரிசி கஞ்சி என்ற பெயரில் உணவாகக் கொடுத்து விட்டு அதற்கு 1,380 ரூபாய் கட்டணம் என்று கூறியுள்ளனர். அதேபோல் பி.பி.ஈ கிட் கட்டணமாக 10 ஆயிரத்து 416 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு சபீனா முன்பணமாக கட்டிய தொகையில் இருந்து கழித்து கொண்டு மீதி பணத்தை மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ளது

இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த சபீனா மருத்துவமனையின் அநியாய கட்டணம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரை வாபஸ் பெறுமாறு மருத்துவமனை நிர்வாகம் கெஞ்சி வருகிறதாம். சபீனாவிடம் வசூலித்த பணத்தை உடனடியாக திருப்பி தருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியபோதிலும் சபீனா தனது புகாரை வாபஸ் வாங்க மறுத்துவிட்டதால் மருத்துவமனை நிர்வாகம் தற்போது அலறி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!