தமிழ்நாடு
கமல் மாறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை: மநீகவில் இருந்து விலகிய மகேந்திரன்!
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது அக்கட்சியினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனே கோவை தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்தார்
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருந்த நிலையில் இன்று அக்கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அந்த கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் விலகியுள்ளார்.
இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் கமல்ஹாசனின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை என்றும் அவர் மாறுவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து டாக்டர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: