தமிழ்நாடு
நாளை முதல் டாஸ்மாக் நேரம் மாற்றம்: குடிமகன்கள் அதிர்ச்சி
![tasmac - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/tasmac.jpg)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. அதன்படி நாளை முதல் கடைகள் இயங்க கூடாது என்றும் மளிகை கடைகள் டீக்கடைகள் காய்கறி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது இதில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரமும் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காலை 8 மணி முதல் 12 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.