தமிழ்நாடு
நாளை முதல் ஊரடங்கு: தலைமைச் செயலாளருக்கு முக்கிய உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்!
![MK Stalin - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/MK-Stalin.jpg)
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் 20 ஆம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் மளிகளை கடைகள் மதியம் 12 மணி வரை இயங்கவும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
நாளை முதல் தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் தான் இயங்க முடியும். அதேபோல மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையே இயங்கும்.
மருத்துவ அவசரநிலை அளவுக்கு #Covid19 தொற்றின் தீவிரம் இருப்பதால், உடனடியாகக் கட்டளை மையம் (War Room) ஒன்றை திறந்திட வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன்.
உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகளும் தம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். pic.twitter.com/Cmn6aq8Ck4
— M.K.Stalin (@mkstalin) May 5, 2021
இறுதி ஊர்வலம், அதைச் சார்ந்த சடங்குகளில் இனி 25 பேருக்கு பதில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும். அதேபோல திருமண விழாக்களில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி.
இதையொட்டி மு.க.ஸ்டாலின், ‘தமிழகம் முழுமைக்கும் கொரோனா வைரஸ் தொற்று நிலையை நிர்வகிப்பதற்கு உடனடியாக ‘கட்டளை மையம்’ ஒன்றைத் திறக்க தலைமைச் செயலாளரிடம் அறிவுறுத்தியுள்ளேன். தமிழகத்தின் இனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் தேவை – இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு ஆகியவற்றைத் தெரிந்து – ஒருங்கிணைந்து செயல்பட இந்த மையம் உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.