தமிழ்நாடு
போதிய அளவு இருப்பு வைத்து கொள்ளுங்கள்: பிரதமர் மோடிக்கு மம்தா அறிவுரை!
தடுப்பூசியை இலவசமாக வழங்குதல் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ளுங்கள் என்றும் மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி அறிவுரை கூறியுள்ளார்.
தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரொனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வருகிறது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறையையும் போக்குவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்ற பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’தடுப்பூசியை இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து அதிகப்படியான தேவை இருப்பதால் அந்த மருந்தை போதிய அளவு மத்திய அரசு இருப்பு வைத்துக் கொள்ளுமாறும் பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.
மேற்குவங்க முதல்வரின் அறிவுரையை ஏற்று பிரதமர் மோடி செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.