தமிழ்நாடு
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: சென்னையில் இன்றைய விலை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு இருப்பதன் காரணமாகவும் இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டதன் காரணமாகவும் இந்தியாவில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் இன்று பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து உள்ளிட்ட ரூபாய் 92.70 என விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து 86.09 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் விலை இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில நாட்களில் ரூ.100ஐ தொட்டுவிடும் என்று கூறப்பட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.