தமிழ்நாடு
மாஸ்க் போடமல் போலீஸாரை மாஸ்க் போடச் சொல்லும் திமுக உ.பி; ஜெயக்குமார் கலகல ஷேரிங்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் பலர், தங்கள் சொந்த தொகுதிகளிலேயே தோல்வியைத் தழுவினார்கள். அந்த வகையில் தமிழக மீன் வளத் துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார், இராயபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவருக்கு எதிராக திமுகவின் ஐடிரீம் ஆர்.மூர்த்தி நின்றார்.
இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 64,424 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் மூர்த்தி. அதே நேரத்தில் வெறும் 36,645 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்துக்கு வந்தார் ஜெயக்குமார். அதிமுக அமைச்சராக இருந்த ஜெயக்குமாரே இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தமிழக அரசியலில் மிகப் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
காவல்துறையாகவே மாறி பொதுமக்களையும்,போலீஸையும் மாஸ்க் அணியச் சொல்லி அதிகார அட்வைஸ் செய்யும் உடன் பிறப்பு..
குறிப்பு :உடன்பிறப்பு மாஸ்க் அணியவில்லை என்பது குறிப்பிடதக்கது…???? pic.twitter.com/kmoEA6Chlz
— DJayakumar (@offiofDJ) May 4, 2021
இருப்பினும் அவர் தேர்தலைத் தொடர்ந்து, ‘வெற்றியோ, தோல்வியோ எப்போதும் மக்கள் பணித் தொடரும். அதில் எந்த சுணக்கமும் இருக்காது’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று திமுக தொண்டர் ஒருவர், காவலர்கள் சிலர் மாஸ்க் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வருவதைத் தடுத்து, ‘எங்க மாஸ்க்?’ எனக் கேட்கிறார். அதே நேரத்தில் அவரே முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிகிறார். இதைச் சுட்டிக்காட்டி கிண்டல் செய்துள்ளார் ஜெயக்குமார்.