கிரிக்கெட்
CSK அணியிலும் மூவருக்கு கொரோனா; ரத்தாகுமா IPL?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இரண்டு நிர்வாகக் குழுவினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல சென்னை அணியின் பேருந்து ஓட்டுனருக்கும் கொரோனா இருப்பது சோதனை மூலம் உறுதியாகி உள்ளது. அவர்கள் அணியிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக தங்களது பயிற்சியை சென்னை அணியினர் ரத்து செய்துள்ளனர். அடுத்ததாக சென்னை அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து டெல்லியில் மோத இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள சி.எஸ்.கே அணியினர், இதுவரை அங்கு இரண்டு போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். அதில் ஒன்றில் வெற்றியும் மற்றொன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.
இன்று காலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக கே.கே.ஆர் அணிக்கும் ஆர்.சி.பி அணிக்கும் இடையில் நடக்க இருந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது வருணும் சந்தீப்பும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றனர். கே.கே.ஆர் அணியில் உள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.