கிரிக்கெட்
இன்றைய ஐபிஎல் போட்டி திடீர் ஒத்திவைப்பு: என்ன காரணம்?
![KKR vs MI2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/KKR-vs-MI2.jpg)
கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று அகமதாபாத் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத இருந்தது. இந்த போட்டி இன்று இரவு ஏழு முப்பதுக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொல்கத்தா அணியில் விளையாடும் இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா அணியின் வீரர்களான வருண் மற்றும் சந்தீப் ஆகிய இரு வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இரண்டு வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து இன்று நடக்கவிருந்த கொல்கத்தா மற்றும் பெங்களுர் இடையிலான போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போட்டி நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.