தமிழ்நாடு
தேர்தலில் படுதோல்வி அடைந்த அமைச்சர்கள் யார் யார்?
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அதிமுக தனித்து 65 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர்கள் படுதோல்வி அடைந்துள்ளது அதிமுகவுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்கள் வெற்றி பெற்ற போதிலும், அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் தேர்தலில் தோல்வி அடைந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, லடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி சம்பத், ஆவடி தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா, சங்கரன்கோவில் தொகுதியில் அமைச்சர் ராஜலட்சுமி, ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி, விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம், மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின், திருச்சி கிழக்கு தொகுதியில் வெல்லமண்டி நடராஜன், கரூர் தொகுதியில் அமைச்ச்ர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நன்னிலம் தொகுதியில் காமராஜ் அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.