தமிழ்நாடு
ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்: முக ஸ்டாலின் டுவிட்
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் திமுக மட்டுமே தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு தொகுதிகளை கைப்பற்றி உள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியபோது 50 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
எத்தனை சோதனைகள் – பழிச்சொற்கள் – அவதூறுகள்? – வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி!
ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.
உங்களுக்காக உழைப்பேன்!
உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி.
தமிழகம் வெல்லும்!
எத்தனை சோதனைகள் – பழிச்சொற்கள் – அவதூறுகள்? – வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி!
ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.
உங்களுக்காக உழைப்பேன்!
உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி.
தமிழகம் வெல்லும்!