வணிகம்
59 நிமிடம்.. 1 கோடி ரூபாய் கடன்.. பிரதமர் மோடி அதிரடி..!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெள்ளிக்கிழமை 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கடனைச் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு அளிக்கக் கூடிய திட்டம் ஒன்றினை தொடக்கி வைத்துள்ளார்.
இந்தக் கடன் திட்டத்திற்கான இணையதளம் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் 72,000 சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு 23,500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தொடக்கி வைத்துள்ள இந்தத் திட்டத்தினை www.psbloansin59minutes.com என்ற தளத்திற்குச் சென்று பதிவு செய்து 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும்.