தமிழ்நாடு
மறுதேர்வு, சிறப்பு அரியர் தேர்வு ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அரியர் மற்றும் தேர்வு தவறவிட்டவர்களுக்கான மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் பங்கு கொள்ளாத மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மறு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்த மாணவர்களுக்கும் அரியர் சிறப்பு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த தேர்வை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அண்ணா பல்கலைகழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என்பதும் ஒத்திவைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.