இந்தியா
காவல்துறை வெளியிட்ட ‘குக்கூ குக்கூ’ பாடல்: இணையத்தில் வைரல்
![police song - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/police-song.jpg)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக மாநில அரசுகள் பொழுதுபோக்கு பாடல்கள் மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சமீபத்தில் சந்தோஷ் நாராயணனின் ‘குக்கூ குக்கூ’என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் அந்த பாடலின் பாணியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடலை கேரள காவல்துறையினர் உருவாக்கியுள்ளனர். அந்த பாடலில் அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மாஸ்க் அணிவது காலத்தின் கட்டாயம் என்றும், கொரோனா வைரஸ் அதிகரித்துவரும் இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் தனிமனித இடைவெளியை கடைபிடித்து ஒருவரை ஒருவர் டச் செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் சானிடைசர் மூலம் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்றும் இவை அனைத்தையும் வழக்கமாக செய்தால் கொரோனாவில் இருந்து அனைவரும் தப்பிக்கலாம் என்றும் பாடல் வரிகளில் உள்ளது.
அதேபோல் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியை அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அரசுடன் துணைநின்று வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளுங்கள் என்றும் அந்த பாடல் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. குக்குகுக்கூ பாடலில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வரிகளை பதிவு செய்து வீடியோவாக பதிவு செய்ததோடு அந்த வீடியோவுக்கு காவல்துறையினர் நடனமாடி உள்ளனர் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரளா போலீஸ் வழி
எப்போதும் தனி வழி.எப்படியாவது விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சரி #WearAmask #Getvaccinated pic.twitter.com/ZQwFKKDYIS
— Saravanan S (@ArjunSaravanan5) April 28, 2021