Connect with us

தமிழ்நாடு

மே 1, 2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கா? இன்று அறிவிப்பு வெளியாகும் என தகவல்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால் வாக்கு எண்ணும் பணியில் உள்ளவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை என்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கெடுபிடியால் தேர்தல் ஆணையம் விதித்துள்ள இந்த கட்டுப்பாட்டின்படி வரும் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுவதை அடுத்து மே 1 மற்றும் மே 2 ஆகிய இரண்டு தேதிகளிலும் முழு ஊரடங்கு அமல் படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து மே 1 மற்றும் மே 2 ஆகிய இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் நோய்த்தொற்று அதிகம் இருக்கும் மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் புதிய ஆட்சி பதவியேற்றவுடன் இதுகுறித்த உத்தரவுகள் வெளிவரலாம் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

author avatar
seithichurul
வணிகம்8 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா10 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா10 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!