கிரிக்கெட்
சிஎஸ்கே அணிக்கு மேலும் ஒரு வெற்றி: ருத்ராஜ் அபாரம்
![cskwon - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/cskwon.jpg)
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி மிக அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 57 ரன்களும் மனிஷ் பாண்டே 61 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் மற்றும் டூபிளஸ்சிஸ் மிக அருமையான தொடக்கத்தை கொடுத்தனர். ருதுராஜ் 75 ரன்களும் டூபிளஸ்சிஸ் 56 ரன்களும் எடுத்த நிலையில் அவுட் ஆக அதன் பின்னர் ஜடேஜா ஆட்டத்தை முடித்து வைத்தார்.
அந்த அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்தை பிடித்து உள்ளது என்பதும் ஹைதராபாத் அணி மீண்டும் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.