தமிழ்நாடு
தமிழகத்தில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, 3 ஆயிரம் அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்ற 24-ம் தேதி கொரோனா ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. அதில் பெரிய கடைகளை மூட வேண்டும் என்று அரசு தெரிவித்து இருந்தது.
பெரிய கடைகள் என்றால் எதுவெல்லாம் பெரிய கடைகள் என்ற குழப்பம் எழுந்து இருந்தது. இந்நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
3 ஆயிரம் சதுர அடிக்குள் உள்ள கடைகள் ஏசி வசதி இல்லாமல், 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதியுடன் இயங்கலாம்.