இந்தியா
பயணிகள் வரத்துக் குறைவு.. ரயில்களை ரத்து செய்த தெற்கு ரயில்வே!
கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக ரயிலில் பயணிக்கும் எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. எனவே பல்வேறு வழித்தடங்களில் ரயில்களை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.
சென்னை -பெங்களூரு இடையில் தினமும் சென்று வந்த சதாப்தி ரயில் ஏப்ரல் 28-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
மங்களூரில் இருந்து மதியம் 2.20-க்கு கிளம்பி மும்பை லோக்கமானியா திலக் ரயில் நிலையம் வரை செல்லும் ரயில் எண் 02620 ஏப்ரல் 29-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
அதே போன்று மும்பை லோக்கமானியா திலக் ரயில் நிலையத்திலிருந்து மங்களூருக்கு வரும் 02619 ரயில் ஏப்ரல் 30-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மைசூரு – ரேனிகுண்டா வாராந்திர சிறப்பு ரயில் மே 28 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறைந்த அளவில் மட்டும் ரயில் பயணிகள் டிக்கெட் புக் செய்ததால், ரயிலை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.