சினிமா
சிவக்குமார் மதுரையைச் சேர்ந்த வாரிபருக்கு ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள புதுச் செல்போன் கொடுத்தார்!
#SivaKumar sir has gifted a brand new mobile phone worth Rs 21K to the #Madurai youngster #Rahul.. Genuine gesture?? and the controversy ends well.. pic.twitter.com/gkTW7oA1p5
— Kaushik LM (@LMKMovieManiac) November 2, 2018
நடிகர் சிவகுமார் மதுரையைச் சேர்ந்த வாலிபருக்கு ரூ.21,000 மதிப்புள்ள புதுச் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த வாலிபர் புதிய செல்போனை பெறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
மதுரையில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் சிவகுமாருடன், அங்கிருந்த ராகுல் என்ற இளைஞர் செல்ஃபி எடுக்க முயன்றார். எந்தவித இடையூறுமின்றித் தூரத்திலிருந்தவாறு செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த இளைஞரின் செல்போனை, நடிகர் சிவகுமார் ஆவேசமாகத் தட்டிவிட்டார்.
இதில் ராகுலின் செல்ஃபோன் உடைந்தது. இதுதொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் நடிகர் சிவகுமாருக்கு எதிராகப் பதிவுகள் குவிந்தன. பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகர் சிவக்குமார் மன்னிப்பு கோரினார். மேலும், தான் மன்னிப்பு கோரிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதன் பின்னர், ராகுலுக்குப் புதிய மொபைல் ஃபோனை நடிகர் சிவகுமார் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய ராகுல், இனி எந்த நடிகருடனும் செல்ஃபி எடுக்கவே மாட்டேன் என்று கூறினார்.