சினிமா
சர்கார் பிரச்சனையால் பதவியை ராஜினாமா செய்த பாக்கியராஜ்!
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.
வருண் ராஜேந்திரன் எழுதிய செங்கோல் கதையும், சர்கார் படத்தின் கதையும் ஒன்று என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டார். பாக்கியராஜின் இந்த அறிக்கை சர்கார் படத்தின் கதை சர்ச்சையின் போது உயர் நீதிமன்றத்தில் கருத்தில் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து பாக்கியராஜுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், சர்கார் பிரச்சினையில் நியாயமாக நடந்துகொண்டதற்காக சில அசௌகரியங்கள் ஏற்பட்டது. சங்க நலன் கருதி அதை வெளியிட விரும்பவில்லை. நான் போட்டியிடாமல் உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன், தற்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன் என்று பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.