கிரிக்கெட்
டாஸ் வென்றது கொல்கத்தா: பேட்டிங் செய்கிறது பஞ்சாப்!
ஐபிஎல் தொடரின் 21வது போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து சற்றுமுன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணி சற்று முன் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ரன்கள் எடுத்துள்ளது என்பதும் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களை விளாசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே அந்த அணியை புள்ளி பட்டியலில் உயரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் மும்பையை பின்னுக்கு தள்ளிவிட்டு நான்காவது இடத்தை நோக்கி முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது