கிரிக்கெட்
‘டை’ ஆனது டெல்லி-ஐதராபாத் போட்டி: வெற்றி பெற்றது யார்?
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 159 ரன்கள் எடுத்ததால் நேற்றைய டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி ‘டை’ ஆனது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர் பிரதிவ் ஷா 53 ரன்களும் கேப்டன் ரிஷப் பண்ட் 37 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 160 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்ததால் போட்டி ‘டை’ ஆனது. இந்த போட்டியில் வில்லியம்சன் 66 ரன்களும், பெயர்ஸ்டோ 38 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஓவரை முதலில் சந்தித்த ஐதராபாத் அணி 7 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். டெல்லி அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பெங்களூர் அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடவுள்ளன.