சினிமா செய்திகள்
பாலபிஷேகம் வேண்டாம்: விஜய் வேண்டுகோள்!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்நிலையில், சர்கார் படத்தின் கட் அவுட்களுக்கு விஜய் ரசிகர்கள் பாலபிஷேகம் பண்ண வேண்டாம் என நடிகர் விஜய் தனது நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை விஜய்யின் நண்பரும் நடிகருமான தாடி பாலாஜி தற்போது தெரிவித்துள்ளார். பாலபிஷேகத்திற்கு பதிலாக பால் வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு உங்களால் முடிந்த உதவியையோ அல்லது அந்த பால் பாக்கெட்டையோ தானம் செய்யுங்கள் எனவும் அவர் கூறியதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.
சர்கார் படத்தின் கதை திருட்டு உள்ளிட்ட பிரச்னைகள் வலம் வருவதால், தற்போது தானே வீடியோ வெளியிட வேண்டாம் என நடிகர் விஜய் நினைப்பதாகவும், அதனால் தான் தாடி பாலாஜி மற்றும் நடிகர் சங்க நிர்வாகி ஒருவரையும் வைத்து தனது கருத்தை விஜய் பதிவிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.