தமிழ்நாடு
தமிழகத்திலும் சனி, ஞாயிறு ஊரடங்கா? இன்று மாலை அறிவிப்பு என தகவல்!
தமிழகத்தில் ஏற்கனவே திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு மட்டும் முழுநேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் அந்த தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு பிறப்பித்தால் வெள்ளி இரவு முதல் திங்கள் அதிகாலை வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அந்த நேரத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் 50 சதவீதத்திற்கு மேலானவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிடப்படுவார்கள் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அதேபோல் ஊரடங்கு விதிகளை சரியாக கடைபிடிக்காதவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி உள்பட ஒருசில மாநிலங்களில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்திலும் அதே நிலை ஏற்படும் என்ற தகவலால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.