தமிழ்நாடு
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் ஜெட் வேகத்தில் இருப்பதால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறையாமல் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 3.15 லட்சம் பேர் இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாகத் தொற்றும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவ அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மும்முறை உருமாறிய வைரஸ் பரவி வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.