தமிழ்நாடு
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரனோ இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் முதல்வர் உள்பட பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மணி நேரத்துக்கு முன்பாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்பியுமான டிஆர் பாலு அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது அவர் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கும் கொரோனா ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.