இந்தியா
12 ஆம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு; 10 ஆம் வகுப்புத் தேர்வு ரத்து- அரசு அறிவிப்பு
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12 ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. நாட்டில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் சூழலில், இன்று பிரதமர் நரேந்திர மோடி, அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
சிபிஎஸ்இ-க்கு கீழ் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வானது வரும் மே மாதம் 4 ஆம் தேதி முதல், ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், மாணவர்களின் இறுதி ரிசல்ட் எப்படி கணக்கிடப்படும் என்பது குறித்து சீக்கிரமே அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,84,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,027 பேர் கொரோனாவல் உயிரிழந்துள்ளார்கள்.