Connect with us

இந்தியா

வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்பிஐ விதிகளை மீறி வசூல் செய்த ரூ.300 கோடி: அதிர்ச்சி தகவல்

Published

on

ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ தேவையில்லாமல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை கட்டணமாக வசூலித்து உள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

மாதம் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம், பண பரிவர்த்தனை கட்டணம், ரயில் டிக்கெட் புக்கிங், மொபைல் போன் ரீசார்ஜ் போன்றவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் குறித்து நீண்ட நாட்களாகவே புகார்கள் பெறப்பட்டு வருகின்றன

மேலும் சேவை கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்படும் தொகைகள் குறித்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு பெரும்பாலும் தெரியாமலேயே போய் வீணாக பண இழப்பும் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. மேலும் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது வங்கிகள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப அபராதத் தொகையை வசூலிக்கின்றன

இந்த நிலையில் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பணியாளர்களால் வங்கிகள் குறிப்பிடும் அளவுக்கு மினிமம் பேலன்ஸ் தொகையை வைத்துக் கொள்ள முடியாத நிலை இருப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. இதை கருத்தில் கொண்டு வங்கி கணக்கு இல்லாத ஏழை எளிய மக்கள் வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஆக மாறினார்கள்

ஆனால் இந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை கட்டணம் என்ற பெயரில் ஏதாவது தொகையை வங்கிகள் வசூலித்துக் கொண்டு தான் உள்ளன. அந்த வகையில் நாடு முழுவதும் 45 கோடிக்கு மேலான வாடிக்கையாளர்களைக் கொண்ட பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து தேவையில்லாமல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு நான்கு முறைக்கு மேல் ஏடிஎம்-இல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எஸ்பிஐ 17 ரூபாய் 70 காசுகள் கட்டணம் வசூலித்து உள்ளது. இவ்வாறு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து தேவையில்லாமல் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 12 கோடி கணக்குகளில் இருந்து 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோன்று இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல கோடி ரூபாயை வசூலித்து விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐஐடி ஆய்வில் தெரிய வந்துள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்