Connect with us

தமிழ்நாடு

உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் ஊரடங்கா..?- முதல்வர் முக்கிய தகவல்

Published

on

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சம் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை தமிழக அரசு அமல் செய்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளுடன் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், நாகை, மற்றும் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தான் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள அதிகமான ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே மிக அதிகமாக 2 கோடியே 5 லட்சம் பேருக்கு இந்தப் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நாம் நன்றாக செயல்பட்டதன் காரணமாக, நம்மைப் போல பிற மாநிலங்களும் தமிழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காடு மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 20 விழுக்காடு மக்களான 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 10 ஆம் தேதி வரையில் சுமார் 37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் அடுத்த இரண்டு வாரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மக்களும் தாமாக முன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் நம்மிடம் போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசி இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பேசினார்.

 

 

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!