சினிமா செய்திகள்
மாரி செல்வராஜூக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான கரணன் திரைப்படம் ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதல் நாள் மட்டுமே 11 கோடி ரூபாய் வசூலைக் கர்ணன் திரைப்படம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. தனுஷ் நடிப்பில் இந்த வசூல் மிகப் பெரிய உச்சம். ஆனால் இன்று முதல் திரை அரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், வசூல் குறையும்.
இருந்தாலும் மிகப் பெரிய குஷியில் கரணன் படத்தைத் தயாரித்த தாணு, மாரி செல்வராஜை வைத்து, தன்னிடம் சூர்யாவின் காலஷீட் உள்ளது. அவரை வைத்து 2022-ம் ஆண்டு ஒரு படத்தை இயக்கி தருமாறு கூறியுள்ளார்.
சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தை விரைவில் தாணு தயாரிக்கிறார். அதற்கு இடையில் இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில், மார் செல்வராஜ் துரூவ் விக்ரம் படத்தை முடித்துவிட்டு வந்துவிடுவார். 2022-ம் ஆண்டு சூர்யாவை வைத்து, மாரி செல்வராஜ் ஒரு படத்தை இயக்குவார் என்று தகவல்கள் கூறுகின்றன.