இந்தியா
மீண்டும் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்: கண்முன்னே வரும் கடந்த ஆண்டு கஷ்டம்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பிற பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவிய போது திடீரென அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல வட மாநில தொழிலாளர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் செல்லும் வழியிலும் பல புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை கருத்தில் கொண்டு பேருந்துகள் மற்றும் ரயில்களில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் போதே சொந்த மாநிலத்திற்கு சென்று விடுவோம் என்று பல வட மாநில தொழிலாளர்கள் சொந்தமான நிலத்தை நோக்கிப் படையெடுக்க தொடங்கி விட்டனர் இதனால் நிறுவனங்கள் கடைகள் ஆகியவற்றில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் குறிப்பிடத்தக்கது.