சினிமா செய்திகள்
‘பொன்னியின் செல்வன்’ எப்போ ரிலீஸ்..?- நடிகர் கார்த்தி பளீச் பதில்
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய கிளாசிக் நாவலின் தழுவலாக இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பிரம்மாண்ட பொருட் செலவிலும், கிராஃபிக் காட்சிகள் மூலம் தயாராகி வரும் இந்தப் படம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது முழு வீச்சில் ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொன்னியின் செல்வன் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து நடிகர் கார்த்தி தகவல் அளித்துள்ளார்.
‘என்னுடைய அடுத்தபடமாக பொன்னியின் செல்வன் ரிலீஸாகும். இதுவரை 70 சதவீதம் படப்பிடிப்பை முடித்துள்ளோம். 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு முதல்பாகத்தை ரிலீஸ் செய்ய உள்ளோம். கொரோனா காரணமாக ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாக தமிழ் சினிமா படமாக்க நினைத்ததை இப்போது நடத்திக் கொண்டிருக்கிறோம்’ என்று கார்த்தி கூறியுள்ளார்.