தமிழ்நாடு
பகல் 1 மணிக்கே 53% வாக்குப்பதிவு: புதுவை வாக்காளர்கள் அபாரம்!
தமிழகத்தை போலவே அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பதும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் புதுவை முதல்வர்கள் நாராயணசாமி, ரங்கசாமி உள்பட பல அரசியல்வாதிகள் புதுவையில் இன்று காலை முதல் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுவையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 20.7% வாக்குப்பதிவு நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக காரைக்கால் மாஹே ஏனாம் ஆகிய தொகுதிகளில் நல்ல வாக்கு பதிவு நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பகல் ஒரு மணி நிலவரப்படி புதுவையில் 53 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது என தேர்தல் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் வாக்குப்பதிவு முடியும்போது 80 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. புதுவை வாக்காளர்கள் போலவே தமிழகத்திலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்க வேண்டும் என்று அனைவரும் கருத்தாக உள்ளது.