தமிழ்நாடு
ஓட்டு போட சைக்கிளில் வந்த விஜய்: ரசிகர்களின் தள்ளுமுள்ளால் பரபரப்பு
தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையில் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், குஷ்பு, உள்பட பலர் தங்களது வாக்குகளை பதிவு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் தளபதி விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்றார். அவருடன் பாதுகாப்புக்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் ரசிகர்கள் சென்றனர்.
இந்த நிலையில் நீலாங்கரை வாக்குச்சாவடி முன் விஜய் நின்ற போது அவரைச் சுற்றி ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் ரசிகர்களிடம் இருந்து அவரை மீட்டு வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க குறித்த பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து ஒரு வழியாக விஜய் தன்னுடைய வாக்கை பதிவு செய்த பின் அவரை பாதுகாப்பாக காவல்துறையினர் அனுப்பிவைத்தனர். விஜய் ஓட்டு போட நீலங்கரை வாக்குச்சாவடிக்கு வந்ததால் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.