தமிழ்நாடு
ஆழ்வார்பேட்டையில் மகள்களுடன் ஓட்டு போட்டார் கமல்ஹாசன்!
தமிழக சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் ஓட்டு போட்டு வருகின்றனர்.
ஏற்கனவே இன்று காலை 7 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜீத், சூர்யா, கார்த்தி, சிவகுமார் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி ஓட்டு போட்டனர்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர்களுடன் வாக்கு பதிவு செய்ய வந்தார்.
இன்று காலை 7.20 மணிக்கு ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வாக்குச்சாவடிக்கு கமலஹாசன் தனது மகளுடன் வந்து வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார். இதே வாக்கு சாவடியில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிமான ஸ்ரீபிரியாவும் வருகை தந்து வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றபோது கமல்ஹாசனுடன் அவரது கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.