சினிமா செய்திகள்
அக்சயகுமாருடன் பணிபுரிந்த 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவருடன் பணிபுரிந்த 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் ’ராம் சேது’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர் பரிசோதனை செய்து கொண்டபோது அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக தனது வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார் என்பதும் மருத்துவர்கள் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அக்ஷய் குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து ’ராம் சேது’படக்குழுவினர் நூறு பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் 45 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரே படத்தில் பணிபுரியும் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.