இந்தியா
எல்லாம் பொய்! ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்.. உலகிலேயே விலை உயர்ந்த பயிர் இந்தியாவில் சாகுபடி.. உண்மை என்ன?
![hoop shoots - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/hoop-shoots.jpg)
ஒரு கிலோ காய்கறி ஒரு லட்சம் ரூபாய். இந்த பயில் தற்போது இந்தியாவில் சாகுபடி செய்யப்படுகிறது என்று அண்மையில் ஒரு செய்தி வந்தது. அனைவரும் இதைப் படித்து ஆச்சரியப்பட்டோம். ஆனால் அது எல்லாம் பொய் என்று அம்பலம் ஆகியுள்ளது.
ஆம், அண்மையில் சுப்ரியா ஷாகூ என்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், “ஒரு கிலோ காய்கறி ஒரு லட்சம் ரூபாய். உலகின் விலை உயர்ந்த காய்கறியான ‘hop-shoots’ பீகாரில் உள அம்ரீஷ் சிங் என்பவரால் முதல் முறையாக பயிரிடப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் இடையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்து இருந்தார்.
One kilogram of this vegetable costs about Rs 1 lakh ! World’s costliest vegetable,’hop-shoots’ is being cultivated by Amresh Singh an enterprising farmer from Bihar, the first one in India. Can be a game changer for Indian farmers ????https://t.co/7pKEYLn2Wa @PMOIndia #hopshoots pic.twitter.com/4FCvVCdG1m
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 31, 2021
இந்த டிவிட்டை பல ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டு இருந்தன. அது குறித்து ஆய்வு செய்த தைனிக் ஜாக்ரன் என்ற இந்தி நாளிதழ், பீகாரில் உள்ள அம்ரீஷ் சிங்கை நேரடியாகச் சென்று சந்தித்தது. அப்போது தான் அந்த டிவிட்டரில் வந்துள்ள அனைத்து தகவல்களும் பொய் என்று தெரியவந்துள்ளது. அம்ரீஷ் சிங், பழுப்பு அரிசி, கோதுமை உள்ளிட்ட பயிர்களைத் தான் பயிர் செய்து வருகிறார். hop-shoots’ பற்றி எதுவும் தனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
hop-shoots’ உண்மையா?
hop-shoots என அழைக்கப்படும் இந்த பயிர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேசச் சந்தைகளில் ஒரு கிலோ 1000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது. இந்திய மதிப்பில் 1 லட்சம் ரூபாய் வரை விற்பனையானது.
hop-shoots சிறப்பு என்ன?
hop-shoots பயன்பாடு குறித்து நம்மிடம் பேசிய ஒருவர், hop-shoots-ன் பழம், மலர் மற்றும் தண்டு என அனைத்தும் பானம் தயாரித்தல், பீர் தயாரித்தல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை தயாரிப்பது போன்ற மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த காய்கறியின் தண்டுடன் தயாரிக்கப்படும் மருந்து, காசநோய் சிகிச்சையில் அதிக நோய் தீர்க்கும் விளைவைக் கொண்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது என்றார். அதன் பூ hop-cones அல்லது strobile என்று அழைக்கப்படுகிறது, இது பீர் தயாரிப்பதில் நிலைத்தன்மை முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள கிளைகள் உணவு மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.
இதை ஒரு மூலிகையாகப் பயன்படுத்துவது ஐரோப்பிய நாடுகளிலும் பிரபலமாக உள்ளது, அங்கு காய்கறியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுவதால் சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க இது பயன்படுத்தப்படுகிறது. hop-shoots முதன் முதலில் 11-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இவை மனித உடலில் புற்றுநோய் செல்களைக் கொல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படும் ஹுமுலோன்கள் மற்றும் லுபுலோன்கள் என்ற அமிலத்தைக் கொண்டுள்ளன. மனச்சோர்வு, பதட்டம் உள்ளவர்களுக்குத் தளர்வு அளிக்கிறது, வலி நிவாரணி மற்றும் தூக்கமின்மையையும் குணப்படுத்துகிறது.
ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில் hop-shoots சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. இந்தியாவில், இது முன்னதாக இமாச்சல பிரதேசத்தில் செய்யப்பட்டது, ஆனால் அதிக விலை காரணமாக அதன் சந்தைப்படுத்தல் பெரியளவில் நடைபெறாததால் நிறுத்தப்பட்டது.