தமிழ்நாடு
ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என விரலை வெட்டிக்கொண்ட தொண்டர்: மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி அதாவது நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து விடும் என்பதும் அதன் பின்னர் வாக்குப்பதிவு ஒன்றுதான் பாக்கி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் வாக்குகள் போட மக்கள் தயாராகி விட்டனர் என்பதும் அவர்கள் தேர்ந்தெடுக்க போவது யார் என்பது மே இரண்டாம் தேதி தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திமுக தலைவர்களும், திமுக தொண்டர்களும் மிக தீவிரமாக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று பணிபுரிந்து வருகின்றனர். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் இந்த முறை ஆட்சியை பிடித்தே தீரவேண்டும் என்று அவர்கள் மிகத் தீவிரமாக வேலை செய்து கொண்டு வருகிறார்கள் என்பதும் அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுகவுக்கு சாதகமாக தான் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் திமுக தொண்டர் ஒருவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதற்காக விரலை வெட்டிக் கொண்டு பிரார்த்தனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று விரலை வெட்டிக் கொண்டவர் சிவகாசியை சேர்ந்த குருவையா என்பதும் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.