தமிழ்நாடு
அனேகமாக நான் செய்யும் கடைசி பிரச்சாரம் இதுவாகத்தான் இருக்கும்: உதயநிதி ஸ்டாலின்
அனேகமாக நான் பிரச்சாரம் செய்யும் கடைசி பிரச்சாரம் இதுவாகத்தான் இருக்குமென உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திமுக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருபவர் உதயநிதி ஸ்டாலின் என்பது தெரிந்ததே. அவர் மீது சமீபத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. இந்த புகார் குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் இதுகுறித்து கூறியதாவது: முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி அவர்களையோ அல்லது சுஷ்மா சுவராஜ் அவர்களையோ தவறாக பேச வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. பாஜகவில் உள்ள சீனியர் தலைவர்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு குறுக்கு வழியில் பிரதமர் ஆனார் மோடி என்பதை கூறுவது தான் என்னுடைய நோக்கம்
நான் பல சீனியர் திமுகவினரை ஓரங்கட்டிவிட்டு முன்னுக்கு வருவதாக பிரதமர் குற்றஞ்சாட்டி இருந்ததற்கு பதில்தான் நான் கூறினேன். மேலும் என் மீது பாஜகவினர் புகார் கொடுத்துள்ளார்கள். நான் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது, தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. அனேகமாக என்னை தகுதி நீக்கம் செய்யவும் வாய்ப்பு உள்ளது. அனேகமாக நான் பேசும் கடைசி கூட்டம் இதுவாகத்தான் இருக்கும்’ என்று உதயநிதி பேசினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனியர்களை ஓரங்கட்டி குறுக்குவழியில் பொறுப்புக்கு வந்ததாக பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் என்னை விமர்சித்தார். சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு குறுக்குவழியில் பிரதமர் ஆனவர் நீங்கள்தான் என்று வேறொரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவருக்கு பதிலளித்தேன். pic.twitter.com/N2WX5MU1P3
— Udhay (@Udhaystalin) April 3, 2021