சினிமா செய்திகள்
நீங்க ரஜினிக்கு வாழ்த்து சொல்லாமலே இருந்திருக்கலாம்: கமல்ஹாசனை கலாய்த்த சீரியல் நடிகை!
![Rajini Kamal - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Pisasu-2.jpg)
நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் நபராக அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர் கமலஹாசன் என்பது தெரிந்ததே. ஆனால் அவருடைய வாழ்த்தில் ஒரு ட்விஸ்ட் இருப்பதாகவும் வாழ்த்துவது போல அவர் இகழ்ச்சி செய்ததாகவும் நெட்டிசன்கள் கூறி வந்தனர்.
குறிப்பாக அவர் தனது வாழ்த்தில், ‘திரையில் தோன்றுவதால் மட்டுமே ரசிகர்களை வென்று எடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்’ என்று கூறியிருந்தார். திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் அவர் மக்கள் மனதை வென்றவர் என்பது தெரிந்தும் அதனை கமல்ஹாசன் வேறுவிதமாக சுட்டிக்காட்டியுள்ளார் என்பதை ரசிகர்கள் கோடிட்டுக் காட்டி அவரை கலாய்த்தனர்.
இந்த நிலையில் தொலைக்காட்சி சீரியல் நடிகை அனன்யா இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘இதற்கு நீங்கள் வாழ்த்து சொல்லாமலேயே இருந்திருக்கலாம் கமல்’ என்று கலாய்த்துள்ளார்.
கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பின் விஜய் டிவி உட்பட பல டிவிகளில் சீரியல்களில் நடித்து வருபவர் சரண்யா என்பதும் தற்போது அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’ என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.