தமிழ்நாடு
மரியாதையாக திரும்ப பெறுங்கள், இல்லையேல் சட்ட நடவடிக்கை: ஸ்டாலினுக்கு பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
மரியாதையாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தான் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாஜக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அல்ல, பொய் ராதாகிருஷ்ணன் என்று கூறினார்.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் என்னுடைய பெயரை வேண்டுமென்றே மாற்றி முக ஸ்டாலின் கூறியுள்ளார் என்றும், பொன்ராதாகிருஷ்ணன் என்ற என்னுடைய பெயரை பொய் ராதாகிருஷ்ணன் என்று கூறியதை அடுத்து அவர் தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையேல் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கையை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய வார்த்தைகளை திரும்ப பெறுவாரா? அல்லது சட்டபூர்வ நடவடிக்கை எதிர் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.